புத்தக அட்டை கதை விளக்கச் சித்திரம் வடிவமைக்கும் கலைஞர்கள்

புத்தக அட்டை கதை விளக்கச் சித்திரம் வடிவமைக்கும் கலைஞர்கள்

சுமன திசாநாயக்க (1922 – 1995) • இவர் 1922 இல் மாத்தறை, கம்புறுப்பிட்டிக் கிராமத்தில் பிறந்தார். கொழும்பு தொழினுட்பக் கல்லூரியில் கலை பயின்று, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் சித்திரக் கலைப் பயிற்சி பெற்றுள்ளார். கல்வித்திணைக்களத்தில் சித்திரக் கலைப் பரிசோதகராகவும், நூல் வெளியீட்டுச் சபையில் சித்திரக் கலைப் பணிப்பாளராகவும் சேவையாற்றினார். சிறுவர் நூல்களுக்காகப் புதியதொரு பாணியில் சித்திரங்களைப் படைத்த ஒரு கலைஞராக இவர் சிறப்புப் பெறுகின்றார். • எண்ணெய் (தைல் ) வர்ணம், நீர் வர்ணம், அக்கிரலிக்கு போன்ற வெவ்வேறு ஊடகங் களைப் பயன்படுத்தி ஆக்கங்கள் படைத்துள்ளார். இவரது ஆக்கங்கள் இரண்டு வகை : எண்ணெய் வர்ணச் சித்திரம் கதைக் காட்சிச் சித்திரம் எளிமையான, நவீன வடிவங்களைக் கொண்ட பற்ரிக் (Batik) ஆக்கங்களுக்கான ஆரம்ப கால முன்னோடியும் ஆவார். அவர் படைப்பாக்கத்தின் போது எளிய, அரூப நிலையான தளவுருவங்களையும், நிறங்களையும் மிகவும் ஆக்கபூர்வமான வகையில் பயன்படுத்தியுள்ளார். இவ்வுலகு சாராத எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டு, தத்ரூபமான உணர்வு களை வெளிப்படுத்தும் வகையிலும், நயப்புக்கு வழிகோலும் வகையிலும் இவரது படைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. புத்தக அட்டைகள், கதைக் காட்சிச் சித்திரங்கள், சிறுவர் நூல்கள், சஞ்சிகைகள் போன்றவற்றுக்காக எளிய தளவடிவங்களைக் கொண்டு சித்திரங்கள் படைத்துள்ளமை யைக் காண முடிகின்றது.

 

வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் (ரமணி) (1942)

1942 இல் யாழ்ப்பாணம், அளவெட்டியில் பிறந்த சிவசுப்பிரமணியம், 1961 இல் யாழ்ப்பாண ”விடுமுறைக் கால ஓவியக் கழகத்தில் ” அடிப்படை ஓவியக் கல்வி பெற்று, அரச கலைக் கல்லூரியில் ஓவியக் கலையில் உயர்கல்வி பயின்றார். அரச கலைக் கல்லூரியில் வரைதல், ஓவியம் தீட்டல் தொடர்பாக மேலும் பயின்று, பிற்காலத்தில் அழகியற்கல்விப் பிரதிப் பணிப்பாளர் பதவியையும் வகித்தார். • இவர் ஓவியங்களை மட்டுமன்றி பல சிற்பங்களையும் வடித்துள்ளார். • இயற்கைவாத பாணியுடன் நவீன நுட்ப முறைகளையும் கலந்து தமக்கே உரித்தான பாணியில் அவர் ஆக்கம் படைத்துள்ளார். ‘ராதா’ எனும் செய்தித்தாளுக்காக முதன் முதலாக விளக்கப்படமொன்றினைப் படைத்தார். பின்னர் பல தமிழ்ச் செய்தித்தாள்களுக்கும் சித்திரங்கள் படைத்துள்ளார். புத்தக அட்டை வடிவமைப்பில் புதிய சோதனைகளைச் செய்த அவர் தமிழ் புத்தகங் களுக்கு புத்தக அட்டையை வடிவமைத்தார். பின்னர் கல்வி அமைச்சின், கல்வி வெளியீட்டுத் திணைக்களப் பாடநூல்கள் உட்பட பல்வேறு நூல்களுக்கு அட்டைகளை வடிவமைத்துள்ளார். இவரது படைப்புக்கள் தமக்கே உரிய தனித்துவமான பாணியில் படைக்கப்பட்டுள்ளவை யாகும்.

தமிழ்4

நான்காந்தர தமிழ்மொழிப் பாடநூலொன்றுக்காக அவர் ஆக்கிய புத்தக அட்டை

அ.கலாமணி

பாட்டுத்திரத்தாலே….

‘பாட்டுத் திறத்தாலே’ எனும் நூலுக்கு அவர் ஆக்கிய அட்டை

error: Content is protected !!